உலக அளவில் அகில இந்திய உலகத்திலே முதன் மதலாக கொடூர கொலைக்காரர்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் திருடர்களும் லஞ்சவாதிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் முதல் முறையாக பரிசு கொடுப்பதாக அறிவித்த ஒரு நிறுவனம் நம் நிறுவனம்.
நீங்கள் எல்லாம் யோசிக்கலாம் குற்றம் செய்தால் தண்டனை தானே கிடைக்கும் இவர்கள் என்ன பரிசு கொடுக்கிறார்கள் இவர்கள் என்ன முட்டாள்களா என
நீங்கள் இன்னும் ஆழமாக யோசிக்க வேண்டும் திருட்டு கொலை கொள்ளைகள் கற்பழிப்புகள் கொடூர குற்றங்கள் லஞ்சங்கள் ஊழல்கள் ஏமாற்றங்கள் இவைகளை அழிக்க ஒருவரும் இல்லை ஆனால் அவைகள் மனித குணத்தை அளிக்க கூடியவை ஆதலால் பலதரப்பட்ட சைத்தான்களால் உருவாக்கப்பட்ட மனிதர்கள் காயப்படுவதையும் மனிதர்கள் துயர படுவதையும் கண்டு ரசித்து பத்து கரம் கொண்டு கைதட்டு ரசிக்கும் கொடூர சைத்தான்களால் மனிதர்கள் உருவாக்கப்பட்டார்கள் என்றால் அவர்கள் இப்படியான குற்றங்களை தான் செய்வார்கள் நல்ல மனிதர்களை அழிப்பார்கள் ஆதலால் அந்த சைத்தான்களால் இவ்வகையான பரிசுகள் முதன் முதலாக வழங்க இருக்கின்றன
யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்
பொய் பேசுகிறவன் ஏமாற்றுகிறவன் ஊழல் செய்கிறவன் கொள்ளை அடிக்கிறவன் கொலை செய்கிறவன் கொடூர எண்ணம் கொண்ட லஞ்சவாதிகள் ஊழல்வாதிகள் தன்னைத் தவிர யார் ஒருவரும் நலமாக வாழ கூடாது என்று அருவருக்குத்தக்க எண்ணம் கொண்ட மனிதர்கள் சாரி மிருகங்கள் ஒன்றுதானே இவர்கள் எல்லோரும் கலந்து கொள்ளலாம்
50,000 கோடி முதல் பரிசு கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசு உண்டு தீங்கு செய்த அனைவரையும் பரிசு கிடைக்கிறது இதுவும் உலகத்தில் முதல் முறை தான்
இப்படி ஒரு செய்தி வெளியிட்டதும் முதன் முதலாக இந்த நிறுவனத்தை ஒரு கூட்டமே கூடிவிட்டது
அவர்கள் வந்தவுடன் சொன்னார்கள் எங்களைப் போல் ஒரு பச்சை துரோகிகள் ஒரு பித்தலாட்டக்காரர்கள் யாரும் கிடையாது எங்களால் இந்த அரசாங்கமே நாசமாக போகும் அளவிற்கு கொண்டு வந்திருக்கிறோம் ஆம் நாங்கள் போக்குவரத்து துறையை சேர்ந்தவர்கள் எங்களுக்கு மாதம் ஐம்பதாயிரம் வருகிறது
எங்களுக்கு மாதமானால் 50000 60 ஆயிரம் ரூபாய் என மணி எழுத்தால் பணம் என்பதைப்போல 30ஆம் தேதி 29ஆம் தேதியே அக்கவுண்டில் ஏறி விடுகிறது இதனால் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் நாசமாக்க வேண்டும் என்பதற்காகவும் கூமுட்டை ஆக்க வேண்டும் என்பதற்காகவும் நாங்கள் ஓட்டு செல்லும் பேருந்துகளில் பொது மக்களை பெரும்பாலும் ஏற்றி செல்வதே இல்லை வயதானவர்களோ பள்ளிக்கூடம் படிக்கும் மாணவர்களோ நின்று இருந்தால் கண்டும் காணாதபோது நிறுத்தாமல் போய்விடுகிறோம் வெறும் பஸ்ஸை ஓட்டிக் கொண்டிருக்கிறோம் அதனால் எத்தனையோ குழந்தைகள் படிக்க முடியாமல் எத்தனையோ முதியவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு நாங்கள் தான் காரணம் இந்த நாட்டையும் இந்த மக்களையும் கூமுட்டை ஆக்கி கொண்டிருக்கும் எங்களுக்குத் தான் ஐம்பதாயிரம் கோடி முதல் பரிசு வழங்க வேண்டுமான ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாத கேட்டுக் கொண்டிருந்தார்கள்
தொடரும்