|God |life|
மனித வாழ்க்கையும் மறைந்திருக்கும் மர்மங்களும்
கடவுள், விதி, முயற்சி — என் நீண்டகால ஆய்வின் தொடக்கம்
![]() |
| கற்பனை புகைபடம் |
மனிதர்களுடைய வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி நான் நீண்ட காலமாக ஒரு ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.
இந்த ஆய்வு என்பது புத்தகங்களில் படித்த அறிவோ, யாரோ சொல்லிக் கொடுத்த கருத்துக்களோ அல்ல.
என் வாழ்க்கையில் நான் பார்த்த சம்பவங்கள், உணர்ந்த வேதனைகள், மனிதர்களின் வாழ்வில் நடந்த மாற்றங்கள் — இவையெல்லாம் சேர்ந்து என்னுள் எழுப்பிய கேள்விகளின் தொடர்ச்சி.
இந்த ஆராய்ச்சியில் நான் மூன்று முக்கியமான விஷயங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.
1. கடவுள் இருக்கிறாரா இல்லையா?
2. மனித வாழ்க்கை முழுவதும் விதிப்படியா நடைபெறுகிறது?
3. முயற்சி தான் மனிதனை உயர்த்துகிறதா? அறிவாளியாக மாற்றுகிறதா?
இந்த மூன்று கேள்விகளும் என் மனதில் சாதாரணமாக தோன்றிய எண்ணங்கள் அல்ல.
சின்ன வயதில் இருந்து என் உள்ளத்தில் உருவான சந்தேகங்கள்.
நாள்கள் செல்ல செல்ல வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் அந்த கேள்விகளை இன்னும் ஆழப்படுத்தின.
இந்த ஆராய்ச்சியை நான் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு தொடங்கவில்லை.
உண்மையில், “நான் ஏன் இந்த கேள்விகளை இவ்வளவு தீவிரமாக யோசிக்கிறேன்?” என்பதற்கே எனக்கு பதில் தெரியவில்லை.
ஆனால் சில விஷயங்களை நான் மிகவும் உன்னிப்பாக கவனித்தேன்.
அந்த கவனிப்புகள் தான் இந்த தேடலை தொடர்ந்து கொண்டு செல்கின்றன.
கடவுள் பற்றிய முதல் கேள்வி
“இதுதான் உன் சாமி… இவர்தான் உன்னை படைத்தவர்…”
என்று சின்ன வயதில் எனக்குச் சொன்னார்கள்.
நானும் அதை நம்பினேன்.
அந்த நம்பிக்கையோடு கோயிலுக்கும் சென்றேன்.
ஆனால் அங்கே தான் என் மனதில் முதல் பிளவு உருவானது.
ஒருவர் கோயிலுக்குள் சென்று சாமியின் அருகில் நின்று வேண்டிக்கொள்ளலாம்.
ஆனால் இன்னொருவர் கோயிலுக்கு வெளியே நின்று மட்டுமே கும்பிட வேண்டும் என்றார்கள்.
அப்போது என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது:
“இருவரையும் ஒரே கடவுள் தான் படைத்திருந்தால்,
ஒருவருக்கு மட்டும் அருகில் செல்ல அனுமதி…
இன்னொருவர் வெளியே நிற்க வேண்டிய நிலை ஏன்?”
இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களையும் ஒரே கடவுள் தான் படைத்தார் என்று சொல்கிறார்கள்.
ஆனால் அதே உலகத்தில் மனிதர்களுக்குள் வேறுபாடு உருவாக்கப்படுகிறது.
ஒருவர் உயர்ந்தவர்.
மற்றொருவர் தாழ்ந்தவர்.
ஒருவர் சாமிக்கு அருகில் செல்லலாம்.
மற்றொருவர் வெளியில் நிற்க வேண்டும்.
அப்படியானால் அந்த கடவுள் நீதியானவரா?
இந்த கேள்வி என் மனதை ஆழமாக பாதித்தது.
“சாமி” என்றால் நீதியா இருக்க வேண்டாமா?
என்னைப் பொறுத்தவரையில்,
சாமி என்றால் எல்லோரையும் சமமாக பார்க்கும் ஒருவர் ஆக இருக்க வேண்டும்.
ஒருவருக்கு மட்டும் நல்லது செய்து, இன்னொருவரை துன்பப்பட வைக்கும் ஒருவரை எப்படி கடவுள் என்று ஏற்க முடியும்?
சாமியே நீதியில்லாமல் இருந்தால், மனிதர்களின் வாழ்க்கையில் நீதி எப்படி இருக்கும்?
இந்த கேள்விகளின் காரணமாக நான் சாமிகளை வணங்குவதை நிறுத்திக் கொண்டேன்.
ஆனால் வணங்குவதை நிறுத்தினாலும்,
அந்த கேள்விகள் என் மனதிலிருந்து போகவில்லை.
மாறாக, வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவமும் அந்த ஆராய்ச்சியை இன்னும் ஆழமாக மாற்றியது.
முன்னோர்கள் நம்பியது… நான் ஏற்க வேண்டுமா?
வரலாறுகள் பல கதைகளை சொல்கின்றன.
புராணங்கள் பல விஷயங்களை எழுதுகின்றன.
முன்னோர்கள் பல தலைமுறைகளாக வணங்கிக் கொண்டே வந்திருக்கிறார்கள்.
ஆனால் யாரோ ஒருவர் பார்த்ததாக சொன்னதை,
நானும் பார்த்தது போல அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரவில்லை.
நான் பார்த்ததை மட்டும் தான் சொல்ல முடியும்.
நான் உணர்ந்ததை மட்டும் தான் பகிர முடியும்.
அதனால் தான் நான் இந்த உலகத்தை என் கண்களால் பார்த்தபடி புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.
இந்த தேடல் இன்னும் முடிவடையவில்லை…
“கடவுள் இருக்கிறாரா இல்லையா?”மேலும்படிக்க;அசிங்கபடுத்தும் சிங்கபெண்படை
என்ற கேள்விக்கு இன்று வரை எனக்கு முழுமையான பதில் கிடைக்கவில்லை.
ஆனால் சில விஷயங்கள் நடப்பதற்கான காரணங்கள் இருக்கின்றன என்று தோன்றுகிறது.
மனிதர்கள் உருவாக்கிய அநீதிகளை கடவுளின் பெயரில் ஏற்க முடியவில்லை.
இந்த தேடல் இன்னும் தொடர்கிறது…

0 Comments