Header Ads Widget

Responsive Advertisement

தங்கத் தமிழன் கவிதைகள்

 தங்கத்தமிழன் கவிதைகள் 


இந்த உலகத்தையே சிறைச்சாலை ஆக்கியது
உன் பிரிவு

இருப்பு கம்பிகளால் செய்யப்படும்
கதவுகளால் இல்லை 
இந்த சிறை சாலை

சாலையோரத்தில்
பூத்து நிற்கும் பூக்களாலும்

மரத்திலிருந்து மெல்ல வரும் காற்றினாலும்

பூக்களில் வீசும் வாசங்களாலும்

செய்யப்பட்ட
லேசான மெதுவான
கதவுகள்

என்றாலும்

உன் நினைவுகள் 
இரும்பை விட உறுதியாய்
இருக்கிறது


அவைகளை
உடைக்க முடியாமல்

சிறைப்பட்டே

வாழ்கிறேன்



அம்மா

அன்பில்லாத சாமிக்கு ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன 
அன்புள்ள சாமி தான் அனாதையை அலைகின்றனர் அம்மா 


தங்கதமிழன் கவிதைகள் 








Post a Comment

0 Comments